ஜேர்மனி - நோர்த்-ரைன் - மாநிலமான வெஸ்ட்பாலியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் குழந்தை ஒன்று காயமடைந்ததாகவும் நேற்று சனிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
வெசெல் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கூரையில் மைக்ரோலைட் விமானம் மோதி தீப்பிடித்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னர் விமானம் வானில் பறக்கவிடப்பட்ட பலூன் ஒன்றுடன் மோதியதாக நேரில் கண்ட சாட்சிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.