Wednesday 24th of April 2024 05:08:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
பரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு!

பரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு!


சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள.

முன்னர் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் மே.இந்தியத்தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து அணி தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கம் 3வது டெஸ்ட் போட்டி மன்செஸ்டரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஹோல்டர் களத்தடுப்பை தேர்வு செய்ததை அடுத்து முதலாவது இனிங்சுக்காக விளையாடிய இங்கிலாந்து அணி 369 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பொப் 91 ஓட்டங்களையும், பட்ளர் 67 ஓட்டங்களையும், பிராட் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் கெமர் ரோச் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து முலவாது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது 197 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

மே.இந்தியத் தீவுகள் அணி சார்பில் அணித்தலைவர் ஹோல்டர் 46 ஓட்டங்களையும், டௌவ்ரிச் 37 ஓட்டங்களையும், கெம்பல் 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவர்ட் பிராட் 14 ஓவர்கள் பந்து வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதையடுத்து 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 58 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான பேர்ன்ஸ் 90 ஓட்டங்களுடனும், சிப்லி 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர். அணித் தலைவர் ஜோ ரூட் அதிகரடியாக துடுப்பெடுத்தாடி 56 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஒரு 6 ஓட்டம் எட்டு 4 ஓட்டங்கள் விளாசி 68 ஓட்ங்களைப் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.

இந்நிலையில் 399 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றும் நாளையும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கின்ற போதிலும் இங்கிலாந்து பந்து வீச்சை சமாளித்து விக்கெட்டுக்களை பாதுகாப்பது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெருஞ்சவாலாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் இங்கிலாந்து அணி இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE