உலகெங்கும் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 60 இலட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்து இன்றுவரை பதிவாகியுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை இன்றுவரை ஒரு கோடியே 47 ஆயிரத்துக்கும் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 52 ஆயிரத்து 256 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, தற்போதுவரை 56 இலட்சத்து 52 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான தொகையினர் தொற்று நோயுடன் உலகெங்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவா்களின் சுமார் 66 ஆயிரத்து 245 பேர் ஆபத்தான நிலையில் செயற்கைச் சுவாசக் கருவிகளின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், பெரு உள்ளிட்ட நாடுகள் இன்னமும் மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 49 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் 14 இலட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 32 ஆயிரத்து 812 போ் உயிரிழந்துள்ளனர். 9 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் 87 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளதுடன் , 24 இலட்சத்து 20 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பெருவில் கொரோனாவால் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 801 ஆயிரமாக உயர்ந்துள்ளது.