Tuesday 16th of April 2024 04:14:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரஷ்யாவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனை ஆரம்பம்!

ரஷ்யாவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனை ஆரம்பம்!


ரஷ்யா அதன் இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் மனிதப் பரிசோதனைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கிறது.

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் அந்நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதப் பரிசோதனையில் சாதகமான முடிவுகளை வெளிப்படுத்தியதாக அண்மையில் அறிவித்திருந்தது.

கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியின் சோதனை வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து கொரோனா தடுப்பூசி மனிதப் பரிசோதனையில் வெற்றிபெற்ற முதல் நாடு என ரஷ்யா தன்னை அறிவித்துக்கொண்டது.

முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தன்னார்வலா்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

இந்த பரிசோதனையில் பங்கெடுத்த தன்னார்வலர்கள் ஜூலை 15 மற்றும் ஜூலை 20 திகதிகளில் வெளியேறினா்.

முதல் தடுப்பூசி அதன் பாதுகாப்பையும் செயல்திறனையும் நிரூபித்துள்ளது எனத் தெரிவித்த இத்திட்டத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் எலெனா ஸ்மோல்யார்ச்சுக், இந்தத் தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரலாம் எனவும் குறிப்பிட்டிரு்தார்.

ஆனால் அது வணிக ரீதியாக எப்போது சந்தைக்கு வரும்? என்ற உறுதியான கால எல்லையை அவா் வெளியிடவில்லை.

இந்நிலையிலேயே ரஷ்யாவின் இரண்டாவது, கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனைகளை இன்று முதல் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் நான்காவது மிக அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்களைக் கொண்டுள்ள ரஷ்யா, கொரோனா தடுப்பூசி பந்தயத்திலும் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE