பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான சிங்கப்பூர் அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் 6 தமிழர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனா்.
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் 26.5 இலட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக இளையவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் 37 அமைச்சர்களில் ஆறு அமைச்சர்கள் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இந்தியத் தமிழா்களான தர்மன் சண்முகரத்னம், குமாரி இந்திராணி ராஜா, எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கா சண்முகம், டாக்டர் ஜனில் ஆகிய ஆறு போ் இடம்பிடித்துள்ளனர்.
அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: சிங்கப்பூர்