தமிழ்நாட்டில் கொரோனா ஆதிக்கம் விடாது துரத்திவரும் நிலையில் இன்றும் 7 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்பயைடில் இன்று (ஜூலை-27) தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆயிரத்து 993 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதன் மூலம் ஐந்தாவது நாளாக ஆறாயிரத்தை கடந்த தொற்று பதிவாகியுள்ளது.
இதையடுத்து மொதத்த தொற்று 2 இலட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக உயர்வடைந்து.
இதேவேளை இன்று 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 3571 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றும் ஆயிரத்து 138 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 95 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை