Thursday 25th of April 2024 05:48:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தில் முதன்முறையாக  பூனை ஒன்றுக்குக் கொரோனா!

இங்கிலாந்தில் முதன்முறையாக பூனை ஒன்றுக்குக் கொரோனா!


இங்கிலாந்தில் பூனை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் விலங்கினமாக இந்தப் பூனை பதிவாகியுள்ளது.

அதன் உரிமையாளா்களிடம் இருந்தே இந்தப் பூனைக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம். ஆனால் நல்ல செய்தியாக அந்தப் பூனையின் உரிமையாளா்கள் இப்போது குணமடைந்துள்ளனர் என இங்கிலாந்தின் தலைமை கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வெய்பிரிட்ஜில் உள்ள விலங்கு நல மைய ஆய்வகத்தில் கடந்த ஜூலை 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பூனை கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என இங்கிலாந்து அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் விலங்கொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பூனை ஆரம்பத்தில் பொதுவாக பூனைகளிடையே பரவும் ஹெர்பெஸ் வைரஸ் தொற்றால் (herpes virus) பாதிக்கப்பட்டது. ஆனால்ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக அதனிடம் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதன்போது அது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது தெரியவந்தது.

இது மிகவும் அரிதான நிகழ்வு என இங்கிலாந்தின் பொது மருத்துவ துறை இயக்குனர் யுவோன் டாய்ல் தெரிவித்துள்ளார்.

இதுவரை வேறு சில நாடுகளில் கொரோனா பாதிப்புடன் கண்டறியப்பட்ட விலங்குகள் லேசான அறிகுறிகளைக் காண்பிப்பதுடன், குணமடைகின்றன. செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு இந்த நோயை பரப்ப முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

பூனைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றன என்பது சிறிது காலமாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவை மனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவத் துறைத் தலைவர் ஜேம்ஸ் வூட் கூறினார்.

நியூயார்க், ஹொங்கொங் மற்றும் நெதர்லாந்தில் செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறித்த செய்திகள் வந்துள்ளன.

நெதர்லாந்தில் ஒரு பண்ணையில் இருந்த பதினொரு பூனைகளில் மூன்று தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதேபோன்று நியூயோர்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் எட்டு பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமையும் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE