Tuesday 23rd of April 2024 06:21:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவிலிருந்து மீண்ட பொலிவிய  ஜனாதிபதி பணிக்குத் திரும்பினார்!

கொரோனாவிலிருந்து மீண்ட பொலிவிய ஜனாதிபதி பணிக்குத் திரும்பினார்!


கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணமடைந்த பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனெஸ் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டிருந்த போது எனக்கு அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி என இன்று பணிக்குத் திருப்பிய அவா், தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொலிவியர்கள் ஒருபெரிய குடும்பம். நாங்கள் ஒன்றிணைந்து முன்னேறுவோம் எனவும் அந்த ருவிட்டரில் அனெஸ் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி தலைவரான ஈவோ மோரலெஸ் பதவி விலகிய பின்னர் கடந்த நவம்பரில் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் செனட்டரான 52 வயதான அனெஸ் பதவியேற்றார்.

கடந்த ஜூலை – 9-ஆம்திகதி அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு கிசிச்சை பெற்று வந்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் உட்பட பல பொலிவிய அரசாங்க அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் 69,429 போ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2,583போ் உயிரிழந்துள்ளனர்.

பொலிவியாவில் விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி அனெஸ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE