Wednesday 24th of April 2024 05:48:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார் சுவிஸ் தூதரர்!

இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார் சுவிஸ் தூதரர்!


சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று (ஜூலை-28) திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் பின்னர் கலந்துரையாடிய விடயங்கள் சம்பந்தமாக முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது தெரிவித்ததாவது,

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் சம்பந்தமாகவும் அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாக உரையாடியதாகவும்,

விசேசமாக இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தல் சம்பந்தமாகவும் தேர்தலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாகவும் அரசியல் சாசனம் சம்பந்தமாக தாம் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கை அரசாங்கம் இதுவரைகாலமும் பல ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டுவருவதாக தெரிவித்த அவர் அதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக சம்பந்தன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, சுவிட்சர்லாந்து, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE