ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாக போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் 115 ஐதேக உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்க அடுத்த கட்ட நடவடிக்கை இன்று எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனி அணியாக நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படும் 115 பேரின் உறுப்புரிமையை நீக்க ஐ.தே.க. மத்திய செயற் குழுவில் நேற்று அனுமதியளித்திருந்தது.
நேற்றைய மத்திய செயற்குழு கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐதேகவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற 102 பேரில் 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு இன்றைய (நேற்றைய) செயற்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் 61 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் இரத்தாகும்.
இவ்வாறு உறுப்புரிமை நீக்கப்பட்ட 115 பேருக்கான உறுப்புரிமை நீக்க கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை