ரொராண்டோவின் ஜேன் - பிஞ்ச் பகுதியில் 14 -ஆவது மாடியில் இருந்து விழுந்து 2 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
டிரிஃப்ட்வுட் அவென்யூ மற்றும் யோர்க்வுட்ஸ் பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ரொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஒன்று விழுந்து கடும் பாதிப்புக்களுடன் அடையாளம் காணப்பட்டதாக அந்த வழியால் சென்றவா்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாக டொராண்டோ பொலிஸ் ஆய்வாளா் டேரன் ஆல்ட்ரிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவசர குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சிறுவனின் மரணம் தொடா்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுவதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறுவன் உயிரிழந்ததைத் தொடா்ந்து அப்பகுதி குடியிருப்பாளர்களும் அயலவர்களும் சிறுவன் விழுந்த இடத்தில் கூடி சிறுவனுக்காக இதய வடிவிலான நினைவுச்சின்னத்தை வடிவமைத்து அதில் பூக்களை வைத்தும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவா்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.