Wednesday 24th of April 2024 07:29:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு!


வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165பேர் இன்றயதினம் விடுவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்செயற்பாடுகள்அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

அந்தவகையில் கடந்த 10 ஆம் திகதி ,டுபாய் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா வேலங்குளம் விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

19நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், அவர்களது சொந்த இடங்களான மட்டக்களப்பு,கண்டி, காலி, போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE