Tuesday 16th of April 2024 04:11:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸிடம் இருந்து  5  ரஃபேல்  போர் விமானங்கள்  இந்தியா கொள்வனவு!

பிரான்ஸிடம் இருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா கொள்வனவு!


பிரான்ஸிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்யவுள்ள 39 ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியாவை வந்தடையவுள்ளன.

பிரான்ஸில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட 5 விமானங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தன. அங்கிருந்து புறப்பட்டுள்ள இந்த விமானங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தியாவில் தரையிறங்கவுள்ளன.

ஹரியாணா மாநிலம் - அம்பாலா இராணுவ விமானத் தளத்தில் இந்த விமானங்கள் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அம்பாலாவில் வானிலை மோசமாக இருந்தால் ஜோத்பூர் விமானத் தளத்தில் விமானங்களைக் தரையிறக்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் இந்தியா வந்தடைந்த பின்னர் இந்திய விமானப் படையில் அவை உத்தியோகபூா்வமாக இணைக்கப்படும்.

பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து 5 போர் விமானங்களும் நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டன. இந்தியா வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப் படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று தரையிறங்கின.

அங்கிருந்து இன்று காலை புறப்பட்ட விமானங்கள் தற்போது இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

இதேவேளை, அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.


Category: உலகம், புதிது
Tags: பிரான்சு, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE