Tuesday 16th of April 2024 12:54:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரம்: 2வது நாளாக தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரம்: 2வது நாளாக தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் துறைமுக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (ஜூலை-30) 2வது நாளாகவும் தொடர்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஊடாக ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் துறைமுகங்கள் அதிகார சபையின் பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.சஞ்ஜீவன் தெரிவிக்கையில், தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார.

குறித்த விடயம் தொடர்பில் துறைமுக தொழிலாளர்களால் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேயுடனான சந்திப்பில் ஏற்பட்ட இணக்கத்தை அடுத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE