ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
கட்டாய முகக்கவசம் மற்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை உள்ளிட்ட புதிய கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தகைய கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தால் நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவ அமைப்பு திணறக்கூடும். அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என ஹொங்கொங் அரசியல் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்டத்தில் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் வெற்றி கண்ட ஹொங்கொங்கில் கடந்த சில வாரங்களாக தினசரி 100-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.
நேற்று 106 புதிய தொற்று நோயாளா்கள் பதிவாகினர். அவற்றில் 98 போ் உள்ளூரில் பாதிக்கப்பட்டவா்களாவர்.
இந்நிலையில் ஹொங்கொங் சமூகத் தொற்று ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக ஹொங்கொங் அரசியல் தலைவர் கேரி லாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் மையங்கள் நிரம்பி வருவதால், விமான நிலையத்திற்கு அருகே 2,000 தற்காலிக படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டவுள்ளதாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உதவ சீனா முன்வந்துள்ளது எனவும் அவா்கள் கூறியுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்