காலம் தொடர்ந்தும் வாய்ப்பு தராது இரா. சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இது தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ந்து 20 வருடகாலமாக ஒருவரையே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இம்முறை தேர்தலின் போது ஒரு மாற்று நபரை தெரிவு செய்ய பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்வதாக அரசியல் ஆய்வாளரும் திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை