மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் மினி பஸ் - டிரக் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 22 பேர் பலியானதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கினியாவின் எல்லைக்கு அருகிலுள்ள கங்காபா நகர தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.
அதிக வேகம் மற்றும் சாலை விதிகளை மதிக்காமையே இந்த விபத்துக்கான காரணம் என மாலி போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தலைநகர் பமாகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் வீதி விபத்துக்கள் சாதாரண நிகழ்வுகள் போன்று அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள வீதிகளின் மோசமான நிலையே அதிக விபத்து- மரணங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
நாட்டின் தென்பகுதியில் மினி பஸ் - லொறி மோதி கடந்த மே-20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.