தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய ஒரே நாளில் மட்டும் 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு நேற்று பி.பகல் (ஜூலை-30) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 864 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.
தொடர்ந்து ஏழாவது நாளாக ஆறாயிரத்தை கடந்த தொற்று பதிவாகியிருந்த நிலையில் நேற்று புதிய தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதையடுத்து மொதத்த தொற்று 2 இலட்சத்து 39 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்து.
இதேவேளை நேற்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையான உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பு பதிவான நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.
சென்னையில் நேற்றும் ஆயிரத்து 175 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 98 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை