Thursday 25th of April 2024 11:35:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய ஒரே நாளில் மட்டும் 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு நேற்று பி.பகல் (ஜூலை-30) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 864 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.

தொடர்ந்து ஏழாவது நாளாக ஆறாயிரத்தை கடந்த தொற்று பதிவாகியிருந்த நிலையில் நேற்று புதிய தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதையடுத்து மொதத்த தொற்று 2 இலட்சத்து 39 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்து.

இதேவேளை நேற்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையான உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பு பதிவான நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.

சென்னையில் நேற்றும் ஆயிரத்து 175 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 98 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE