Friday 19th of April 2024 09:17:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும்  என்கிறார் உலக சுகாதார அமைப்பு தலைவா்!

கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்கிறார் உலக சுகாதார அமைப்பு தலைவா்!


கொரோனா வைரஸ் தொற்று நோயால் வாழ்க்கை முற்றாக முடங்கிவிட்டது என அர்த்தம் கொள்ள வேண்டாம். கொரோனா தொற்று நோயுடன் வாழ உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை சிறப்பாக எதிர்கொள்வதற்காக இரண்டு முக்கிய தூண்களில் ஒன்று சிறந்த அரசியல் தலைமை மற்றொன்று சமூகப் பொறுப்பு எனவும் அவா் குறிப்பிட்டார்.

ஜெனீவாலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்து நேற்று நேரலை மூலம் செய்தியாளா்களிடம் பேசுகையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

உலகளவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் தொற்று நோயாளா்கள் அல்லது மூன்றில் இரண்டு பங்கு தொற்று நோயாளா்கள் 10 நாடுகளைச் சேர்ந்தவா்கள். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தொற்று நோயாளா்களின் அரைப் பங்கினர் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி) மற்றும் சீனாவைச் சேர்ந்த 3 தடுப்பூசி முயற்சிகள் மட்டுமே இதுவரை மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 141 தடுப்பூசி ஆய்வு முயற்சிகளில் 24 தடுப்பூசி ஆய்வு முயற்சிகள் முன்னேற்றகரமான நிலையில் உள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE