இந்து மதம் பற்றி அவதூறு பரப்பி வருவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சர்ச்சைக்குரிய காணொளி வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.