கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளரது உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மேலும் 58 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து இதுவரையில் 2391 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 413 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை