Friday 29th of March 2024 01:04:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
லங்காபுர தொற்றாளரின் மனைவிக்கும்  கொரோனா தொற்று உறுதி!

லங்காபுர தொற்றாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி!


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளரது மனைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லங்காபுர தொற்றாளரது உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று இரவு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத் தொற்றாளர் அவரது மனைவி எனத் தற்போது தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (ஜூலை-31) உறுதிப்படுத்தப்பட்டதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2815 ஆக உயர்வடைந்திருந்தது.

இதேவேளை நேற்றைய தினம் மேலும் 58 பேர் குணமடைந்து வெளியேறிய நிலையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 2391 ஆக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக நாட்டில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 413 ஆக உள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE