புனித ஹச் பெருநாள் விசேட தொழுகைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.
மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசலில் மௌவி எம்.அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
பெண்களுக்கான சிறப்புத் தொழுகை காலை 7 மணிக்கும் ஆண்களுக்கான தொழுகை காலை காலை 7.45 மணிக்கும் இடம் பெற்றது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி சமூக இடைவெளிகளை பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்