Friday 29th of March 2024 11:02:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!


சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன்-நிலக்சனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது யாழ் ஊடக அமையத்தில் நேற்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவரும், யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட ஊடகத்துறை மாணவனுமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவிர்கள், பாடசாலை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஊடகத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று அதிகாலை வேளை யாழ். கொக்குவில், ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அவருடைய வீடு இராணுவப் புலனாய்வாளர்களினாலும், இராணுவ ஒட்டுக்குழுவினராலும் முற்றுகையிடப்பட்டது.

வீட்டில் இருந்த நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுதக் குழுவினர் வீட்டு வாசலில் அவரை அழைத்து விசாரித்தனர். இதன்போது நிலக்சனின் தந்தை, தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் கண் முன்னால் அவரைச் சுட்டுப் படுகொலைசெய்த ஆயுதக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் குற்றவாளிகள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE