Friday 19th of April 2024 04:59:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 332 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 332 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!


கொரோனா முடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தவித்து வருபவர்களில் மேலும் 332 பேர் விசேட விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

சிறிலங்கா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இவ்வாறு இவர்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விசேட விமான மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் இன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE