கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கர்பிணி பெண் பிரசவித்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொழும்பு வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்தது.
இதையடுத்து குறித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை