இலங்கையில் சற்று முன்னதாக புதிய கொரோனா தொற்றாளர் இனம்காணப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பியவர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2815 இல் இருந்து 2816 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 75 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 2514 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 291 ஆக உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை