Friday 19th of April 2024 02:00:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்பிரிக்காவில்  ஒரு மில்லியனை நெருங்கும் கொரோனா!

ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியனை நெருங்கும் கொரோனா!


தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டிவிட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அத்துடன் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்த தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் மட்டும் நேற்று 10,107 புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்த தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒட்டுமொத்தமாக இதுவரை 9 இலட்சத்து 34 ஆயிரத்து 558 தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 ஆயிரத்து 752 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 5 இலட்சத்து 85 ஆயிரத்து 567 போ் தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் 5 மாதங்களுக்கு முன்னர் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டார். அங்கு இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்கா மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய சமூக முடக்கலை அறிவித்தது. ஆனால் பொருளாதாu நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன.

ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளைப் போலவே தென்னாப்ரிக்காவும் ஏழைகளை அதிகமாகக் கொண்ட நாடாக உள்ளது. தொற்று நோயின் விளைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் கடும் வறுமையைின் விளிப்புக்குத் தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அங்கு தொற்று நோயின் தாக்கம் தொடருமாயின் தொற்று நோயை விட உணவின்மை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஏற்கனவே பல்வேறு அமைப்புக்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE