கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடனான சந்திப்பை அடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிழக்கு முனைய செயல்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்காது துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த பணி புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் தங்காலை கோல்டன் இல்லத்தில் இன்று (ஓகஸ்ட்-02) நடைபெற்ற பேச்சுவார்தையினை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்படுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
துறைமுக கிழக்கு முனையத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்சினை தொடர்பாக மொத்தம் 23 துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு