உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 1 கோடியே 82 இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா பலியெடுத்தவா்களில் தொகை இன்றுவரை 6 இலட்சத்து 92 ஆயிரத்து 973-ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 1 கோடியே 14 இலட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இன்றுவரை 48 இலட்சத்து 13 ஆயிரத்து 647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 58 ஆயிரத்து 365 பேர் பலியாகியுள்ளனர்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 27 இலட்சத்து 33 ஆயிரத்து 677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 130 பேர் பலியாகி உள்ளனர்.
தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 18 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்.