கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமலும் கூட போகலாம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் இருந்து நேற்று நேரலையில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சில தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் இருந்தாலும் தற்போதைக்கு அவை துல்லியமான தீர்வுகளை தரக்கூடியதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் தீவிர பரிசோதனைகள் ஆகியவற்றை கடுமையாக அமுல்படுத்த உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், முககவசம் அணிவது கொரோனா வைரசுக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்