Tuesday 23rd of April 2024 06:02:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிரிய இராணுவ நிலைகள் மீது  இஸ்ரேல் விமானத் தாக்குதல்!

சிரிய இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்!


சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சிரிய எல்லையில் குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தினா் நிறுத்தப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் வந்த சில பயங்கரவாதிகள் கண்ணிவெடிளை விதைத்னர். இதனை அவதானித்த இஸ்ரேலிய இராணுவத்தினர் அவா்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதன்போது 4 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கேணல் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 4 பேர் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் இருந்து தப்பியோட முயற்சி செய்த வீடியோ காட்சியை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.

இஸ்ரேல், 1967-ஆம் ஆண்டு சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலுடன் இணைத்துக் கொண்டது. இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் இணைப்பை அங்கீகரித்த ஒரே நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE