Thursday 25th of April 2024 04:06:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஏழு இலட்சம் உயிர்களை பலியெடுத்தது கொரோனா!

ஏழு இலட்சம் உயிர்களை பலியெடுத்தது கொரோனா!


கட்டுக்கடங்காது தொடரும் கொரோனாத் தொற்றினால் உலகளாவிய ரீதியில் பலியானவர்களின் எண்ணக்கை ஏழு இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் 1 கோடியே 85 இலட்சத்து 51 ஆயிரம் பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு இலட்சத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை ஒரு கோடியே 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பிறேசிலில் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தினைக் கடந்துள்ளது.

ரஸ்யாவில் உயரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் 8ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பெருவில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சிலியில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஈரானில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 35 ஆயிரம் பேரும் பிரான்ஸில் 39 ஆயிரம் பேரும் கனடாவில் 8 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE