Saturday 20th of April 2024 06:34:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
லெபனான் வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு: 4000 பேர் காயம்!

லெபனான் வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு: 4000 பேர் காயம்!


லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

உள்ளுர் நேரப்படி மாலையில் இடம்பெற்ற இரட்டை வெடிப்புச் சம்பவமானது 15 நிமிட இடைவெளியில் ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 ரொன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் தான் இந்த பேரழிவுக்கு காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த பாரிய வெடிப்புச் சம்பவத்தின் அதிர்வுகள் பெய்ரூட்டில் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இப் பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரதமர் கூறுகையில், "எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரொன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை" என்றார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE