Thursday 25th of April 2024 06:31:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்!

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்!


9வது பாராளுமன்றத்தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.

வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன்,முன்னாள் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முதல் நபராக தனது வாக்கை அளித்தார்.

இதேவளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் சர்வதேச மற்றும், உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறை தேர்தல் பிரச்சாரபணிகள் அனைத்தும் சுமூகமாக இடம்பெற்றிருந்தது. வன்னிமாவட்டத்தில் கடந்தமுறை இடம்பெற்ற தேர்தல்களை விட அதிகளவான வாக்குகளை நாம்பெற்று வெற்றிபெறுவோம் என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE