லெபனான் தலைநகா் – பெய்ரூட் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் லெபானானுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 தொன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 78 போ் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 3700 போ் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே லெபனானுக்கு உதவத் தயாராக இருப்பதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
பெய்ரூட்டிலிருந்து வந்த படங்களும் வீடியோக்களும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தக் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என அவர் தனது ருவிட்டரில் கூறியுள்ளார்.
இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்ட பெய்ரூட்டில் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட அனைவருக்கும் எங்களால் முடிந்த எந்த வகையான உதவிகளையும் வழங்க இங்கிலாந்து தயாராக உள்ளது எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.