Friday 29th of March 2024 12:14:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாடெங்கும் 70 வீத வாக்குப் பதிவு  தோ்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

நாடெங்கும் 70 வீத வாக்குப் பதிவு தோ்தல் ஆணைக்குழு அறிவிப்பு!


நடைபெற்று முடிந்த இலங்கை பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 70 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல்கள் ஆணைக்குழுத் தலைவா் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை பொதுத் தோ்தல் வாக்களிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

தற்போது வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

நாளை வியாழக்கிழமை காலை வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று முதற்கட்ட முடிவுகள் மதியம் முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவுக்கு முன்னர் அனைத்து தோ்தல் முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் தோ்தல்கள் ஆணைக்குழு தலைவா் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் தோ்தல் வாக்களிப்பு வீதம் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும் வழமையான தோ்தல்கள் போன்றே 70 வீதம் வரையில் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்ததக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE