9வது பாராளுமன்றத் தேர்தலிற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றயதினம் இடம்பெற்றிருந்தது.
அந்தவகையில் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 141 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்றுமாலை வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றயதினம் காலை 7 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் பணிகளிற்காக வவுனியா மாவட்டசெயலகத்தில் 18 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால்வாக்குகள் எண்ணுவதற்காக காமினி தேசியபாடசாலையில் 13 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடுகளில் 2000 ற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதுடன், பொலிசார், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா