ஐக்கிய அரபு ராஜ்ஜியம் – அஜ்மான் பகுதியில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில்இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் எமிரேட்ஸில் உள்ள சூக் எனப்படும் ஈரானிய வணிக வளாகம் ஒன்றிலிருந்து இந்தத் தீ பரவத் தொடங்கியது.
இந்த தளம் அஜ்மான் சிறப்பு மருத்துவமனை மற்றும் தொழில்துறை வளாகத்துக்கு அருகில் உள்ளது
கொவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பல மாதங்களாக சூக் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து எவ்வாறு தீ பரவில் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, இந்தத் தீவிபத்தில் எவரும் காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. தீ பரவிய இடத்தில் இருந்து அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.