Tuesday 23rd of April 2024 03:53:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்!

யாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்!


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணும்பணிகள் இடம்பெற்றும் வரும் சூழலில் யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏராளமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்படுவதாக தெரியவந்திருக்கின்றது.

குறிப்பாக தபால் மூல வாக்குகள் எண்ணும்போதும் செல்லுபடியற்ற வாக்குகள் ஏராளமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னமராட்சியைச் சேர்ந்த தபால் மூல வாக்குகளில் 27 வாக்குகள் செல்லுபடியற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சின்னத்தினைத் தெரிவு செய்திருக்கின்ற அவர்கள், விருப்பத் தெரிவுகளுக்கு பதிலாக சுயேட்சைக்குழு 01, சுயேட்சைக்குழு 02, சுயேட்சைக்குழு 03 என்று தெரிவுகளை மேற்கொண்டிருப்பதால் வாக்குகள் செல்லுபடியற்றவையாக மாறியிருப்பதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE