Saturday 20th of April 2024 12:52:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்;  ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன!

திருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்; ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன!


திருகோணமலை மாவட்டத்தின் வாக்குகள் என்னும் நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் வாக்குகள் என்னும் பணிகள் இன்று காலை குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பமானது என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இன்று காலை திருகோணமலை மத்திய வாக்கெடுப்பு நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;;;

மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கின்ற 44 வாக்கு என்னும் நிலையங்களில் 35 நிலையங்களில் சாதாரண வாக்குகள் என்னும் பணிகளும் 9 நிலையங்களில் தபால் மூலமான வாக்குகளை என்னும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முதலாவது பெறு பேற்றினை இன்று நண்பகல் அளவில் வெளியிட உத்தேசிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல சகல முடிவுகளையும் இன்று மாலைக்குக்குள் வழங்குவதற்கு உத்தேசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக 73.5% சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆகவே இன்று மாலைக்குள் பெறு பேறுகளை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். வாக்குகள் என்னும் பணிகள் அனைத்தும் Covid 19 கொரோனா பாதுகாப்பு விதி முறைகளுக்கு அமைவாகவே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது . அந்த வகையில் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்கள் அனைவரும் இது சம்மந்தமான தங்களுடைய கடமைகளை வாக்கு என்னும் நிலையத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE