நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் நடவடிக்கையின் போது திட்டமிட்ட வகையில் மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று காலை சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலையின் முகத்தினை கறுப்புத் துணியினால் மூடி, கால் கைகளை சிவப்பு, மஞ்சள் துணிகளால் கட்டி மூடி மறைக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய உருவச் சிலையில் ஏணியும் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்