நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வார காலத்துக்கு பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 69 மற்றும் 70 பிரிவுகளின் படி, நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பொலிஸ் சட்டப் பிரிவு பணிப்பாளா் எஸ்.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் அமைதியை நிலைநாட்ட இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் அமைதியை நிலைநாட்ட பொறுப்பை அனைவரும் கைக்கொள்ள வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.