Friday 19th of April 2024 06:38:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
தந்தை, மகனாக இம்முறை  நாடாளுமன்றம் வரும் 3 சோடிகள்!

தந்தை, மகனாக இம்முறை நாடாளுமன்றம் வரும் 3 சோடிகள்!


தந்தையும் மகனுமாக 3 சோடிகள் இம்முறை இடம்பெற்ற நடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

பொதுஜன பெரமுன சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் இம்முறை தோ்தலில் வென்று நாடாளுமன்றத்துக்குச் செல்கின்றனர்.

அத்துடன், சாமல் ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஷஹேந்திர ஆகியோரும் வென்று நாடாளுமன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சோ்ந்த ஜனக பண்டார தென்னக்கோன் அவரது மகன் பிரமித ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ராஜித சேனாரத்ன அவரது மகன் சதுர ஆகியோர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE