Tuesday 16th of April 2024 12:44:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்றுக்கு  தேர்தெடுக்கப்பட்டுள்ள 8 பெண் பிரதிநிதிகள்!

இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்றுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள 8 பெண் பிரதிநிதிகள்!


இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு எட்டுப் பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினரி மாவட்டத்தில் இருந்து மட்டும் மூன்று பெண் பிரதிநிதிகள் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

பவித்ரா வன்னியராச்சி மற்றும் முதித சொய்சா ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தலதா அத்துகோரள இரத்தினபுரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ராஜிகா விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோரும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கீதா குமாரசிங்கவும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரோஹினி கவிரத்ன வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை, அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களிலிருந்து பெண்கள் தெரிவானால் நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கலாம்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் பெண் பிரதிநிதித்துவம் இதுவரை 6.5 வீதத்தை தாண்டவில்லை.

2015 – 2020 நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 5.3% ஆக இருந்தது. 225 உறுப்பினர்களில் 2015 இல் 12 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE