Tuesday 16th of April 2024 03:44:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
தேசியப் பட்டியல் விபரத்தை 14ம் திகதிக்கு முன்னதாக வழங்க பணிப்பு!

தேசியப் பட்டியல் விபரத்தை 14ம் திகதிக்கு முன்னதாக வழங்க பணிப்பு!


பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது.

குறித்த தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னர் இம்முறை பொதுத் தேர்தலின் தேசிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பெயர் விபரங்கள் நேற்று (07) பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் விபரத்தை விரைவில் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த பெயர் பட்டியலை ஆணைக்குழுவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்ற ஏனைய கட்சிகள் தமது கட்சிகளின் சார்பில் தீர்மானிக்கப்படும் உறுப்பினர்களது விபரங்களை எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE