உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிவருகிறது.
இன்று இதுவரையான தரவுகளின்படி கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 இலட்சத்து 48 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
தொற்று நோய் உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் நிலையில் மொத்த தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் 2 கோடியை எட்டவுள்ளது.
இதேவேளை, கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கையும் 7 இலட்சத்து 24 ஆயிரத்தைக் கடந்து உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 இலட்சத்து 45 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
தற்போது தொற்று நோயுடன் 62 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கும் 1 சதவீதத்தினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகில் அமெரிக்காவிலேயே அதிக தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளனர். இங்கு 50 இலட்சத்து 95 ஆயிரத்து 524 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 164,094 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் 29 இலட்சத்து 67 ஆயிரத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 99,702 போ் பலியாகியுள்ளனா்.
இந்தியாவில் 20 இலட்சத்து 99 ஆயிரத்து 611 போ் இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 42,602 போ் இறந்துள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்