ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தொற்று நோயாளிகள் தனிமைப்படுத்தல் மையமாக இருந்த விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 போ் பலியாகியுள்ளனர். மேலும் 10 போ் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள விடுதி கொரோன தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டு நோயாளிகள் அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடுதியில் இருந்த 30 போ் வரை இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விஜயவாடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம்