Tuesday 23rd of April 2024 09:24:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொட்டாஞ்சேனையில் காருக்குள் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு!

கொட்டாஞ்சேனையில் காருக்குள் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு!


காருக்குள் இருந்து ஒருவர் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நேற்று பிற்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கொட்டாஞ்சேனை, அலுத்மாவத்தை பிரதேசத்தில் கார் ஒன்றுக்குள் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காருக்குள் உயிரிழந்த நபர் அதுருகிரிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என்றும், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக கடமையாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிபக்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE