Thursday 28th of March 2024 05:40:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது: உயிரிழப்பும் 5 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்தது: உயிரிழப்பும் 5 ஆயிரத்தை கடந்தது!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தையும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு நேற்று பி.பகல் (ஓகஸ்ட்-10) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 914 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.

இதையடுத்து மொதத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்து 3 இலட்சத்து 2 ஆயிரத்து 815 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

இதேவேளை இன்று 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையான உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பு பதிவான நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

சென்னையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்த தொற்று!

சென்னையில் இன்று 976 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 2 இலட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE